அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் மாணவர் ஒருவருடன் கட்டாய உடலுறவு வைத்துக் கொண்டதற்காக கைது செய்யப்பட்ட ஆசிரியை மேலும் 4 மாணவர்களை 'அந்த' வேலைக்கு பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
அரிசோனாவின் டக்ன்சனில் ஆசிரியையாகப் பணிபுரிபவர் மெலிசா டால்ட்டன். இவர் கடந்த ஏப்ரல் 30-ந் தேதியன்று மாணவர் ஒருவருடன் கட்டாய உடலுறவு கொண்டதற்காக கைது செய்யபப்ட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இருப்பினும் அவர் மீது மேலும் 4 மாணவர்கள் பாலியல் ரீதியான புகாரைக் கொடுத்துள்ளனர். இதில் ஒரு மாணவர் ஆசிரியை மெல்லிசாவின் அந்த வகை சேட்டைகளை அம்பலப்படுத்தியுள்ளார். குளியலறையில் நிர்வாணமாக மெலிசா நிற்கும் புகைப்படங்களை செல்போன் மூலம் அனுப்பி கட்டாய உடலுறவுக்கு அழைத்திருக்கிறார். இதையடுத்து தற்போது 4 மாணவர்களை கட்டாய உடலுறவுக்கு அழைத்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தொடக்கத்தில் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த மெலிசா மாணவர்கள் முன்பு நிறுத்தி விசாரிக்க வேறுவழியின்றி உண்மையை ஒப்புக் கொண்டார்.
இதில் கொடுமை என்னவெனில் வகுப்பறையில் சிலரோடும் காரில் சிலரோடும் இந்த சேஷ்டைகளை மெலிசா டீச்சர் அரங்கேற்றியிருக்கிறாராம்.
அமெரிக்காவின் குமுதுவாக மாறியிருக்கிறார் இந்த மெலிசா

0 கருத்துகள்:
கருத்துரையிடுக