Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out
Home » » சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்ற பொன்சேகா இன்னும் 10 வருடங்கள் சிறை வைத்திருந்தாலும் தைரியம் இழந்திருக்க மாட்டேன்: சீற்றம்

சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்ற பொன்சேகா இன்னும் 10 வருடங்கள் சிறை வைத்திருந்தாலும் தைரியம் இழந்திருக்க மாட்டேன்: சீற்றம்

Written By ADMIN on திங்கள், 21 மே, 2012 | 6:37 AM


அரசியல் பழிவாங்கள் நிமித்தம் சிறை சென்ற என்னை, இன்னும் 10 வருடங்கள் தடுத்து வைத்திருந்தாலும் என்னுடைய தைரியம் ஒருபோதும் சிதறியிருக்க மாட்டாது' என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.


சற்று முன்னர் சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்ற அவர் மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சரத் பொன்சேகா,

"எனக்காக மக்கள் சிந்திய கண்ணீரை நான் ஒருபோதும் மறந்துவிட மாட்டேன். எனக்கு நேர்ந்த அசாதாரணத்துக்காக மக்கள் பட்ட வேதனையையும் மறந்துவிட மாட்டேன். இன்று முதல் மக்களுக்கான எனது பணி மீண்டும் தொடரப்போகிறது. எமது மக்களுக்காக என்னை நான் தியாகம் செய்வேன்.

மக்கள் எனக்கு பாரியதொரு சக்தியினை வழங்கியுள்ளார்கள். அரசியல் பலிவாங்கல்களுக்கு உட்பட்ட எனக்கு நியாயம் கிடைக்க எனது மக்கள் என்னோடு தொடர்ந்தும் இருக்க வேண்டும்.

வாழ்நாள் முழுவதும் உங்களுக்காக நான் இருப்பேன். படையினர் இந்த நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த வெற்றியினை தொடர்ந்தும் பாதுகாப்பேன். மக்கள் மத்தியில் சந்தோஷமும், சமாதானமும் நிலைத்து நாட்டில் ஜனநாயகமான ஆட்சியை கொண்டுசெல்ல நாம் அனைவரும் இணைந்து பாடுவடுவோம்.

நான் மீண்டும் இந்த நாட்டுக்காக என்னை தியாகம் செய்வேன். என் உயிரைக் கொடுத்தேனும் எம் மக்கள் சந்தோஷமாக வாழ வழிசமைப்பேன். உங்கள் அனைவருக்கும் வெற்றி உண்டாகட்டும்!"

0 கருத்துகள்:

கருத்துரையிடுக