வியட்னாமில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தொன்றில் 34 பேர் பலியானதுடன் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். வியட்னாமின் மத்திய பகுதி நகரான பியூவோன் மா தௌட்டிலிருந்து தெற்கிலுள்ள ஹோசி மின் நருக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை புறப்பட்ட இந்த பஸ்
சேரேபோக் ஆற்றுக்குள் வீழ்ந்தது.
இவ்விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்கும் பாதிக்கப்பட்டவர்களை இனம்காண்பதற்கும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
32 பயணிகளுடன் மேற்படி பஸ்ஸின் சாரதிகள் இருவரும் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 21 பேரில் 16 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக