Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out
Home » » விடுதலைப் புலிகளை தோற்கடித்தது எப்படி?

விடுதலைப் புலிகளை தோற்கடித்தது எப்படி?

Written By ADMIN on திங்கள், 21 மே, 2012 | 3:34 AM


இலங்கையில் முப்பதாண்டு காலம் போரை நடத்திய விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தது எவ்வாறு என்பதனை, இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு, முன்னாள் பொலிஸ்மா அதிபர் மகிந்த பாலசூரிய பாடம் நடத்தவுள்ளார்.


வடோதராவில் உள்ள மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை மாணவர்களுக்கே, முன்னாள் பொலிஸ்மா அதிபர் மகிந்த பாலசூரிய, இந்தப் பாடத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு இவர், தீவிரவாத முறியடிப்பு மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்து ஒன்று அல்லது இரண்டு பாடங்களை கற்பிக்கவுள்ளார்.

இதன்போது, விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த தனது அனுபவங்கள் குறித்தே அவர் முக்கிய கவனம் செலுத்துவார். மகிந்த பாலசூரிய இந்தப் பல்கலைக்கழகத்தில் 1976ஆம் ஆண்டில் விஞ்ஞானமாணிப் பட்டத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ரஸ்யாவின் சென்.பீற்றர்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞான பீடத்தில் கலாநிதிப் பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.

கலாநிதிப் பட்டத்துக்காக தான் எழுதிய ஆய்வுக்கட்டுரையை அடிப்படையாக வைத்து, மகிந்த பாலசூரிய ‘விடுதலைப் புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்‘ என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக