ஜார்க்கண்ட் மாநிலத்தில் கணவர் குளிர்சாதன இயந்திரம் வாங்கித் தராததால் விரக்தி அடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஜாம்ஷெட்பூரின் பெங்கால் காலனியில் நேற்று (28.05.2012) இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஜாம்ஷெட்பூரில் உருக்கு ஆலைகள் அதிகம் உள்ளதால் வெப்பமும் இங்கு அதிகம். எனவே வெப்பத்தை சமாளிக்க ஏசி வாங்கித் தருமாறு ஒருவாரமாக கணவரை பினாதாஸ் என்பவர் வலியுறுத்தி வந்தார். ஆனால் பணப் பற்றாக்குறை காரணமாக அவரால் வாங்கித் தர முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு நேற்று பினாதாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக