மனைவியை விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆவடியை அடுத்த திருநின்றவூர் கன்னிகாபுரம் பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சத்யன், எஸ்ஐ ஜோதி ஆகியோர் சம்பவ இடம் சென்று, அந்த தெருவில் வீடுகளில் சோதனை போட்டனர்.
கிரி என்பவர் வீட்டில் தனது மனைவியை விபசாரத்தில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தியது தெரிந்தது. இதையடுத்து, அந்த பெண்ணை போலீசார் மீட்டு மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். கிரியை போலீசார் கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக