வேலூர் அடுத்த பெரிய தெள்ளூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சோனியா காந்தி (வயது 21) 10 ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் கணேசன் மகன் வருண்குமார் (25) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஒரே பகுதியாக
இருந்ததால் வருண்குமாரும், சோனியா காந்தியும் 3 வருடமாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வருண்குமார் ஆசை வார்த்தைகள் கூறி சோனியாகாந்தியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் அவர் கர்ப்பமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சோனியாகாந்தி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வருண்குமாரை வற்புறுத்தினார்.
திருமணத்திற்கு மறுத்த வருண்குமார் இந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இச்சம்பவம் குறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசில் சோனியா காந்தி புகார் செய்தார். போலீசர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான வருண்குமாரை தேடிவருகின்றனர்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக